பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம் தடையைமீறி மாணவர்கள் திரையீடு

1 Min Read

சென்னை,ஜன.29- தடையை மீறி சென்னை பல் கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப் படத்தை மாணவர்கள் தங்களின் மடிக்கணினியில் பார்த்தனர்.

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை 27.1.2023 அன்று  சென்னை பல்கலைக்கழகத்தில் திரையிட இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எஃப்அய்) கிளை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் ஆவணப்படத்தை திரையிட சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு எஸ்எஃப்அய் அமைப்பு கண்டனம் தெரிவித்தது. ஆனால், தடையை மீறி பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை பார்க்கும் நிகழ்வு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் கிளை உறுப்பி னர்கள் மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் திறந்தவெளியில்  தங்களது மடிக்கணினி மூலமாக பிரத மர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை பார்த்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *