ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 30.1.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கையை எதிர்க்கும் வகையில், நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க தனது பி.ஆர்.எஸ். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கே.சந்திரசேகர ராவ் உத்தரவு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசு அலுவல கங்களில் தமிழ்நாட்டவர்க்கு முன்னுரிமை, நீட் தேர்வு விலக்கு மசோதா போன்ற தமிழ்நாட்டு உரிமைகள் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

தி இந்து:

* ஓபிசி பிரிவினரில் உள் ஒதுக்கீடு குறித்து பரிந்துரை செய்திட அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி தலைமையிலான ஆணையத்திற்கும் ஜூலை 2023 வரை மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டிப்பு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* எதிர்க்கட்சிகளுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் பாஜக-ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளன என ராகுல் காந்தி கருத்து.

தி டெலிகிராப்:

* மூத்த பத்திரிகையாளர் சசி குமார் மத அடிப் படையில் பிற சமூகத்தை அழித்திட நினைக்கும் ஒன்றிய அரசின் பெரும்பான்மை வாதத்தை விருப்பத்துடன் சில ஊடகங்கள் ஆதரவளிப்பது வெட்கத்திற்குரிய விசயம் என்று கூறினார்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *