இரண்டுமணி நேரம் நிறுத்தாமல் சிலம்பம் சுழற்றி சாதனை

1 Min Read
தமிழ்நாடு

ஒசூர் உள்வட்டசாலை பெரியார் சர்க்கிள் பகுதியில் குளோபல் வேல்டு ரெக்கார்டு அமைப்பு மேற்பார்வையில் அகத்தியர் வீரவிளையாட்டு சிலம்பப் பள்ளி மாணவர்கள் 130 பேர் உலக சாதனைக்காக தொடர்ந்து இரண்டுமணி நேரம் நிறுத்தாமல் சிலம்பம் சுழற்றி சாதனை படைத்தார்கள். 

இந்நிகழ்ச்சியை ஒசூர் மாநகராட்சி மேயர்எஸ்.ஏ.சத்யா சிலம்பம் சுழற்றி தொடங்கி வைத்தார்.இந் நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் என்.எஸ்.மாதேஸ்வரன்,தேவிமாதேஷ், இந்திராணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். சாதனை படைத்த அகத்தியர் சிலம்பம் பள்ளி ஆசான் லோகநாதனிடம் பொதுமக்கள் கையொலிக் கிடையே சாதனைக்கான விருதை வழங்கினர். பங்குபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன்,  நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர்கள் இரா.பிரேம் குமார், கராத்தே மாஸ்டர் க.கனராஜ், திராவிடர் கழக தொழிலாளரணி மாவட்ட தலைவர் தி.பாலகிருஷ்ணன் ஆகியோர் பதக்கம்,சான்றிதழ், நினைவுபரிசினை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *