யார் கருப்புச் சட்டை …!!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஞாயிறு மலர்

தன் வீட்டுச் சோற

தின்னு புட்டு!

தன் வீட்டு வேலையை

போட்டுவிட்டு!

கருப்புச்

சட்டையை

மேல போட்டுக்கிட்டு!

ஊராரின்

ஏச்சையும் பேச்சையும்

காதில் கேட்டுக்கிட்டு!

தந்தை

பெரியாரின்   

இலட்சியங்களை

வென்றெடுக்க!

தனது

நெஞ்சை நிமிர்த்தி

தோளை உயர்த்தி!

சிங்கம்போல்

வீரநடை போட்டுக்கிட்டு!

அதோ! போகிறானே..!

அவன் தான்

கருப்புச் சட்டை.!

மக்கள்

மானமும் அறிவும் பெற,

தன் மக்களை

மறந்து விட்டு!

தன் மானத்தையும்

மறந்து விட்டு !

இரவு பகல் பாராமல்

இனமான வேட்கையோடு!

ஈடில்லா உழைப்போடு!

ஈரோட்டுப் பாதையிலே

இதோ! போகிறானே..!

அவன் தான்

கருப்புச் சட்டை!!

காசு

பணம் வேண்டாம்!

பட்டம் பதவி வேண்டாம்!

பாராட்டும் புகழும்

வேண்டாம்!

பிரதிபலன் எதுவும்

வேண்டாம்! என்பான்..!

பெரியாரின்

பகுத்தறிவு  ஆயுதத்தை

தனது மூளையில்

ஏந்தியபடி

அதோ போகிறானே..!

அவன் தான்

கருப்புச் சட்டை!

தன்னை

பெரியாரின்

பிள்ளை என்பான் !

கடவுளே இல்லை

என்பான்!

கடவுளை நம்பும்

மக்களுக்கு

காலமெல்லாம்

உழைத்து நிற்பான்!

ஜாதி

இல்லை என்பான்!

சாஸ்திரம்

இல்லை என்பான்!

நீதியை நிலைநாட்ட

வீதியில் இறங்கி நின்று

வீறு கொண்டு

போரிடுவான்!

மக்களை

வெறியூட்டும்

மதங்கள்

வேண்டாம் என்பான்!   மனிதனை

நெறியூட்டும்   மனிதநேயமே

வேண்டும் என்பான்!

தலை தாழ்ந்த

தமிழ் மக்கள்

தலை நிமிர்ந்து

வாழ்ந்திடவே

தன்மான தடியெடுப்பான்!

தந்தை

பெரியாரின் தத்துவத்தை

நிலை நிறுத்திக்

காட்டிடவே

சமூக நீதி

கொடி பிடிப்பான்!

பிறருக்கு

ஒளிகொடுக்க,

தன்னையே

பலி கொடுத்து!,

உருகும்   

மெழுகுவத்தியாய்!

பெருகும்

புன்னகையோடு!

அதோ! போகிறானே..!

அவன் தான்

கருப்புச் சட்டை…!!

    

கவிஞர் சிற்பி சேகர், ‌பட்டுக்கோட்டை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *