ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையை எரித்து விவசாயிகள் போராட்டம்

Viduthalai
1 Min Read

 

இந்தியா, தமிழ்நாடு

தூத்துக்குடி, பிப்.12 தூத்துக்குடி மற்றும் கோவில் பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் நிதிநிலை அறிக்கை, கிராமப்புற விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு விரோதமாக உள்ளது. விலைவாசி உயர்வுக்கு தீர்வு காணாத நிதிநிலை அறிக்கையாகவும்  அமைந்து உள்ளது. எனவே இந்த நிதிநிலை அறிக்கையை கண்டித்து நாடு முழுவதும் 11-ஆம் தேதி கருப்பு நாளாக கடைப்பிடித்து, ஒன்றிய, வட்ட தலைநகரங்களிலும், பிரதான கிராமங்கள் தோறும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்து இருந்தது.

அதன்படி தூத்துக்குடியில் நேற்று (11.2.2023) தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள அஞ்சல்  நிலையம் முன்பு அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் சங்கரன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் முத்து, வைனபெருமாள், முருகன், ஜாய்சன், மனோஸ் உள் பட பலர் கலந்து கொண் டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார்கள். 

இதேபோல் கோவில் பட்டியில் விவசாய தொழிலாளர் சங்கத தினர் அரசின் நிதிநிலை அறிக்கை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட் டனர். பயணியர் விடுதி முன்பு நடந்த போராட் டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் எட்டயபுரம் தாலுகா தலைவர் கருப்பசாமி, தாலுகா செயலாளர் நடராஜன், சி.அய்.டி.யு. மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், தாலுகா குழு உறுப்பினர் கணேசன், விவசாய சங்க கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். 

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மேற்கு காவல் ஆய்வாளர் அரிகண்ணன் தலைமையிலான காவல்துறையினர் 14 பேரை கைது செய்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *