கருநாடக வனத்துறை சுட்டு தமிழ்நாடு மீனவர் கொலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு

சென்னை, பிப். 18-  கருநாடக வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாடு மீனவர் ராஜா உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், கருநாடக வனத்துறையினருக்கு கடுமையான கண்ட னங்களைத் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கருநாடக வனப்பகுதிக்குள் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கருநாடக வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தமிழ்நாடு மீனவர் ராஜா என்பவர் உயிரிழந்தார். கருநாடக வனத்துறையால், வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வனப்பகுதியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் நடமாடியதை, வனத்துறை அதிகாரிகள் பார்த்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

கருநாடக வனத்துறையினர், நால் வரையும் சுற்றிவளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ராஜா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து, ஆற்றுக்குள் விழுந் துள்ளார். மற்றவர்கள் ஆற்றில் குதித்து தப்பி விட்டனர்.

ஊர் திரும்பியவர்கள் ராஜாவை கருநாடக வனத்துறை அதிகாரிகள் சுட்ட சம்பவத்தை தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து, தமிழ்நாடு – கருநாடக எல்லைப்பகுதியான பாலாறு சோதனைச் சாவடியில் அதிக ளவு காவல் துறையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ராஜா குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. மேலும் ராஜா உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கருநாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு கடுமையான கண்டனங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *