சென்னை, பிப்.19- தொழில் முனைவோருக்கு ஒரு அமைப்பை உருவாக்கும் நோக்கத்தை கொண்ட “என் ஜினியர்ட் இன் இந்தியா” என்ற புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்த உரையாடல் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் கார்போரண்டம் யுனிவர்சல் தொழில் நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.முருகப்பன் பங்கேற்று தொழில் துறையின் வழிகாட்டுதல் உரையை நிகழ்த்தினார். தொழில் முனைவோருக்கு எதிர்காலம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. முன்பு இருந்ததைவிட தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உகந்த சூழல் உள்ளது. இது தவிர எளிதாக தொழில் நடத்தும் வசதியும் மேம்பட்டுள்ளது என சையண்ட் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பி.வி.ஆர்.மோகன் தெரிவித்துள்ளார்.