பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி. பாலு 91ஆவது பிறந்தநாள்

0 Min Read

மற்றவை

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு  14.02.2023 நண்பகல் ஒரு மணி அளவில் சைதாப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் 91ஆவது பிறந்தநாளை ‘கேக்’ வெட்டி கொண்டாடினார். உறவினர்களும் தோழர்களும் வந்திருந்து வாழ்த்தி சிறப்பித்தனர். மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் மற்றும் அவரின் இணையர் தமிழ்மதி, மாவட்ட துணை செயலாளர் கோ.வீ. ராகவன் ஆகியோர் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர். அனைவருக்கும் பிரியாணி  உணவு வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *