உண்மை வெளிவரும் வரை அதானி குறித்து கேள்விகள் எழுப்பிக் கொண்டே இருப்போம் – காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் உரை

2 Min Read

அரசியல், இந்தியா

ராய்ப்பூர், பிப்.27 அதானிக்கும் பிரதமருக்கும் என்ன தொடர்பு என்று நாங்கள் நாடாளுமன்றத்தில் கேட்டபோது, முழு உரையும் நீக்கப்பட்டது. அதானியின் உண்மை வெளிவரும் வரை நாடாளுமன்றத்தில் ஆயிரக்கணக்கான முறை கேள்வி கேட்போம், அதை நிறுத்த மாட்டோம் என காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி பேசி னார். காங்கிரஸ் கட்சியின் 85ஆவது மாநாடு, சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று (26.2.2023) நிறைவடைந்தது. இதில், கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

அதானியின் நிறுவனம் நாட் டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப் பையும் பறித்து விட்டது. நாட் டையே பாதிக்கிறது. தேசத்தின் அனைத்து சொத்துக்களையும், துறைமுகம் உள்ளிட்டவற்றையும் அபகரித்துக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு எதிராக நாட்டின் சுதந்திரப் போர் நடக்கிறது. வரலாறு மீண்டும் திரும்புகிறது. இது நாட்டுக்கு எதிரான வேலை. அப்படி நடந்தால் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் இதற்கு எதிராக நிற்கும்.

காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் ஒத்துழை யாமைப் போராட்டம் நடத்திய வர்கள். பாஜவும், ஆர்எஸ்எஸ் காரர்களும் அதிகாரத்தை குறிவைப்பவர்கள். அவர்களின் அரசாங்க சிந்தனையைப் பற்றி ஒன்றை சொல்ல விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய அமைச்சர் ஒருவர் (வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பெயரை ராகுல் குறிப்பிடவில்லை) அளித்த பேட்டியில், ‘‘சீனாவின் பொருளாதாரம் இந்தியாவை விட பெரியது. அதை எதிர்த்து எப்படி போராடு வது’’ என்றார்.

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது அவர்களின் பொரு ளாதாரம் என்ன நம்மை விட குறைவாக இருந்ததா? அப்படியென்றால், வலிமையான யாரையும் எதிர்க்க மாட்டோம், பலவீனமானவர்களை மட்டுமே எதிர்ப்போம் என்று இது அர்த்தப்படுத்துகிறதா?

இது கோழைத்தனம். உங்களை விட வலிமையானவர் யாராவது இருந்தால் அவர்கள் முன் தலை வணங்குங்கள் என்பது சாவர்க்கரின் சித்தாந்தம். பெரிய பொருளாதாரம் கொண்டது என்பதற்காக சீனாவை எதிர்கொள்ள முடியாது என்பது தேசியவாதமா? இதுதானா தேசபக்தி? பலவீன மானவனை அடிப்பதும், வலிமை யானவன் முன் தலைகுனிவதும் என்ன வகையான தேசபக்தி. இவ்வாறு ராகுல் பேசினார்.

சொந்த வீடு இல்லை

ராகுல் பேசுகையில், கடந்த 1977ஆம் ஆண்டு தனது குடும் பத்தினர் அரசு பங்களாவை விட்டு வெளியேறத் தயாரானபோது நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.  ‘‘வீட்டில் ஒரு விசித்திர மான சூழல் இருந்தது. நான் அம்மாவிடம் சென்று என்ன நடந்தது என்று கேட்டேன், நாங்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறோம் என்று கூறினார். அது வரைக்கும் அது எங்கள் வீடு என்றே நினைத்திருந்தேன். எனது அம்மாதான் இது நம் வீடு இல்லை, அரசாங்கத்திடம் கொடுத்து விட்டுப் போக வேண்டும் என்று சொன்னார்கள். அடுத்து எங்கு செல்வீர்கள் என்று எனது தாய் சோனியாவிடம் கேட்ட போது, தெரியாது என்று அவர் பதில் சொன்னார். நான் திகைத்துப் போனேன். அன்று முதல், 52 ஆண்டுகளாக எங்களுக்கு இன்னும் குடும்ப வீடு எதுவும் இல்லை’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *