‘விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு’ தமிழ், ஆங்கில மலர்களை வெளியிட்டார் முதலமைச்சர் கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்பு

Viduthalai
3 Min Read

அரசு, இந்தியா, தமிழ்நாடு

சென்னை, நவ.2 “விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பு மலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டார். இந்தச் சிறப்பு மலர்களை மேற்கு வங்க மேனாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக்கொண்டார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   தலைமைச் செயல கத்தில், செய்தி மக்கள் தொடர் புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” (தமிழ் நூல்) மற்றும்“Tamil Nadu’s Contribution to the Freedom Struggle” (ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்) ஆகிய சிறப்பு மலர்களை வெளியிட, மேற்கு வங்க மேனாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டார்.

மு.க.ஸ்டாலின் முதலமைச்ச ராகப் பதவியேற்று முதன்முதலாக 15.08.2021 அன்று சுதந்திரத் திரு நாளன்று சென்னை தலைமைச் செயலக கோட்டைக் கொத் தளத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து ஆற்றிய உரையின்போது, இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அளித்த பங்களிப்பு குறித்த முழு மையான ஆவணம் ஒன்றை தயாரித்து தமிழிலும் ஆங்கிலத் திலும் வெளியிடும் என்று அறிவித்தார்.

அவ்வறிவிப்பினை செயல்படுத் தும் விதமாகவும், தமிழ்நாட்டு தியாகிகளைப் போற்றி பெருமைப் படுத்தும் வகையிலும், விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்த ஆவணத்தினை தயார்செய்ய, சென்னை லயோலா கல்லூரி மேனாள் தலைவர் பெர்னாட் டி சாமி தலைமையில், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் வரலாற்றுப் பேரா சிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி, தமிழ்நாடு பாடநூல் கழக இணை இயக்குநர் சங்கர சரவணன், எழுத் தாளர் ஸ்டாலின் குணசேகரன், தமிழ்நாடு ஆவண காப்பக ஆய்வு அதிகாரி விஜயராஜா ஆகி யோர்கள் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாகவும்;

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் என். தனலட்சுமி, ஸ்டெல்லா மேரி கல்லூரி உதவிப் பேராசிரியர் சிந்தியா ஜுட், லயோலா கல்லூரி உதவிப் பேராசிரியர் ஏ. அற்புதச் செல்வி, லயோலா கல்லூரி இணைப் பேராசிரியர் எல். செல்வநாதன், லயோலா கல்லூரி உதவிப் பேராசிரியர் சேவியர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் கே. அசோக், ராஜபாளையம், ராஜுஸ் கல்லூரி மேனாள் முதல்வர் வி. வெங்கட் ராமன், அழகப்பா கல்லூரி உதவிப் பேராசிரியர் டி. பாலசுப்பிர மணியன், தமிழ்நாடு மெய்நிகர் பல்கலைக்கழக ஆய்வாளர் செந்தில் குமரன் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர் (வெளியீடுகள்) இரா. அண்ணா ஆகிய பிற உறுப்பினர் களைக் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, இச்சிறப்பு மலர் தயார் செய்யப்பட்டுள்ளது.

இச்சிறப்பு மலரில், அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் சி. நடராஜன் எழுதிய “தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தின் சுருக்கமான வரலாறு”, பஞ்சாப் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் வெங்கட சுப்பிரமணியன் எழுதிய “இந்திய தேசிய வாதமும், சங்கத் தமிழ் இலக்கியமும்”, புதுடில்லி ஜவஹர்லால் நேரு ஆய்வு மையத்தைச் சேர்ந்த வேலாயுதம் சரவணன் மற்றும் வீரமணி எழுதிய “தமிழ்நாட்டில் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஓர் ஆய்வு செய்யப்படாத வரலாறு”, ராஜபாளையம் ராஜுஸ் கல்லூரி இணைப் பேராசிரியர் கே. ராஜேஷ் குமார் எழுதிய “தமிழ்நாட்டில் விவசாயிகள் எழுச்சி (1920-1947)”, சிக்கிம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் வி. கிருஷ்ணா ஆனந்த்  எழுதிய “தேசிய வாதமும் தமிழ்நாட்டின் உழைக்கும் வர்க்கமும்”, எழுத்தாளர் டாக்டர் தியோடர் பாஸ்கரன் எழுதிய “சுதந்திரப் போராட்டமும் என் பது உள்ளிட்ட பல்வேறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.  

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *