அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி

2 Min Read

 பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எங்கே சென்றது?

அரசியல்

பெங்களூரு, மார்ச் 6-  பா.ஜனதா சட்ட மன்ற உறுப்பினர் மகன் வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் சிக்கிய விவகாரத்தில் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை எங்கே சென்றது? என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் மக்கள் குரல் பொதுக்கூட்டம் கருநாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரேயில்  நடைபெற் றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசியதாவது:- 

பா.ஜனதா கட்சியினர் அனை வரையும் மிரட்டி ஆட்சி நிர்வா கத்தை நடத்துகிறார்கள். பிரதமர் மோடி ஒரு நீர்ப்பாசன திட்டத்தை ஆவது செயல்படுத்தினாரா?. சட்டமன்ற தேர்தல் வருவதால் பிரதமர் மோடி, உள்துறை அமைச் சர் அமித்ஷா ஆகியோர் அடிக்கடி கருநாடகம் வருகிறார்கள். கிராம பஞ்சாயத்து தேர்தலுக்கும் மோடி, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலுக் கும் மோடி, சட்டமன்றத் தேர்த லுக்கும் மோடி. மோடி வந்து தான் இங்கு ஆட்சி செய்கிறாரா?.

நாட்டில் 60 சதவீத மக்கள் மோடிக்கு எதிராக உள்ளனர். ஒன்றிய அரசின் துறைகளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. கருநாடகத்தில் மட்டும் 3 லட்சம் காலியிடங்கள் இருக்கின்றன. நாட்டில் ஜனநாயகத்தை காப் பாற்ற பா.ஜனதாவை தூக்கி எறிய வேண்டும். வீடு வீடாக சென்று பா.ஜனதாவின் மோசமான ஆட்சி நிர்வாகம் குறித்து எடுத்துக்கூற வேண்டும்.   பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்திவிட்டனர். இதனால் சாமானிய, நடுத்தர மக்கள் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பா.ஜனதாவினர் ஜாதி, மதங்கள் இடையே மோதலை ஏற்படுத்து கிறார்கள். 

காங்கிரஸ் கட்சி ஹிந்து, முஸ் லிம், கிறிஸ்துவம் என அனைத்து மதங்களையும் சமமாக பார்க்கிறது. பா.ஜனதாவினர் அரசியல் சாச னத்தை தவறாக பயன்படுத்து கிறார்கள். இதை மக்கள் கவனிக்க வேண்டும். கருநாடகத்தில் 40 சதவீத கமிஷன், ஊழல்கள் நடை பெறுவது குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா பேச வேண்டும். எனது அரசியல் வாழ்க்கையில் மோடியை போன்ற மோசமான பிரதமரை பார்த்தது இல்லை. எங்கு சென் றாலும் காங்கிரஸ் தலைவர்களை குறை சொல்வதே அவரது வேலை. பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் மகன் வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் சிக்கியுள்ளது. 

இதுகுறித்து விசாரிக்க வேண் டிய அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எங்கே சென்றது?. 

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *