இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு 300அய் தாண்டியது!

1 Min Read

புதுடில்லி மார்ச் 6- நாட்டில் 97 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்று பாதிப்பு 300-க்கும் அதிகமாக பதிவாகி யுள்ளன, ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  சனிக்கிழமை (4.3.2023) காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 334 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.  

இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 87 ஆயிரத்து 496 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து வெள் ளிக்கிழமை 170 பேர் குணமடைந்துள்ளனர். குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 35 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98 சதவிகிதமாக உள்ளது. தற்போது நாடு முழு வதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறு வோர் எண்ணிக்கை 2,686 ஆக உள்ளது. 

ஒரே நாளில் 3 பேர் இறந்துள்ளனர். அவர்களில் மகாராஷ்டிராவில் 2 பேர்,  கேரளத்தில் ஒருவர் என மூன்று பேர் இறந்துள்ளனர், இறந்தோரின் எண்ணிக்கை 5,30,775 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1 சதவீதமாக உள்ளது.  நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 63 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *