பாலைவனத்தில் சோலைவனம்: அமெரிக்க ஆசிரியரை வியக்கவைத்த மங்கோலிய இணையரின் 27 ஆண்டு காலச் சாதனை!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

“முயற்சி திருவினையாக்கும்” என்ற பொன் மொழிக்கு இலக்கணமாகத் திகழ்கிறது மங்கோலியாவைச் சேர்ந்த ஓர் இணையரின் வாழ்க்கை. பாலைவனத்தை பசுமைச் சோலையாக மாற்ற முடியும் என்ற இவர்களின் அசாத்திய நம்பிக்கையும், அதற்கு எல்லைகள் கடந்து கிடைத்த ஒரு துளி உதவியும் சேர்ந்து இன்று ஒரு மிகப் பெரிய காட்டை உருவாக்கியுள்ள நெகிழ்ச்சியான கதை இது.

40 ஆண்டு காலப் போராட்டம்

மங்கோலியாவின் ஷான்ஸி மாநிலத்தைச் சேர்ந்தவர் 60 வயதான யின் யூஷென். இவர் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் கணவருடன் இணைந்து, கொளுத்தும் வறட்சியையும் கடுமையான மணல் புயலையும் எதிர்த்துப் போராடி, பாலைவனத்தில் மரங்களை நட்டு வளர்த்து வருகிறார். இவர்களின் இந்தத் தியாகமும் உழைப்பும் உலக அளவில் பலரது கவனத்தை ஈர்த்தது. இணையம் மற்றும் ஊடகங்கள் வாயிலாக இந்த இணையரின் அசாத்திய முயற்சியைப் பற்றிப் படித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியர் ரொனால்ட் சகோல்ஸ்கி என்பவர் பெரிதும் நெகிழ்ந்துபோனார். மங்கோலிய இணையரின் முயற்சிக்குக் கைகொடுக்கும் வகையில், கடந்த 1999ஆம் ஆண்டில் தன் சேமிப்பிலிருந்து 5,000 டாலர்களை (சுமார் 50 லட்சம் ரூபாய்) நன்கொடையாக வழங்கினார். அன்று அந்தப் பாலைவனப் பகுதியைப் பார்த்த ரொனால்ட் சகோல்ஸ்கி, “இங்கு காடு வளர்ப்பது சாத்தியமே இல்லை” என்று நினைத்திருந்தார்.

50,000 மரங்களாக வளர்ந்த நம்பிக்கை

அமெரிக்க ஆசிரியர் கொடுத்த அந்தப் பணத்தைக் கொண்டு யின் யூஷென் இணையர் ஏராளமான மரக் கன்றுகளை வாங்கி நட்டனர். கடந்த 27 ஆண்டுகளில், அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பால் அந்த மரக்கன்றுகள் அனைத்தும் இன்று 50,000க்கும் மேற்பட்ட மிகப் பெரிய மரங்களாக வளர்ந்து, அடர்ந்த காடாகக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றன.

27 ஆண்டுகளுக்குப் பின் நெகிழ்ச்சியான அழைப்பு

அன்று “சாத்தியமில்லை” என்று நினைத்த அமெரிக்க ஆசிரியருக்கு, இன்று ஒரு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சி கொடுக்க யின் யூஷென் ஆவலோடு காத்திருக்கிறார். தொலைபேசி மூலம் ரொனால்ட் சகோல்ஸ்கியைத் தொடர்புகொண்ட யின், 27 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கொடுத்த பணத்தில் உருவான அடர்ந்த காட்டை நேரில் வந்து பார்க்குமாறு அன்போடு அழைப்பு விடுத்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான அழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட சகோல்ஸ்கி, “அந்தக் காட்டை நேரில் பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பாலைவன மணலில் விதைக்கப்பட்ட மரக்கன்றுகள், இன்று இரு நாட்டு மனிதர்களிடையே ஒரு அழகான நட்புறவை வளர்த்துள்ளன. மனித குலத்தின் விடாமுயற்சியும், அதற்கு நேசக்கரங்கள் நீட்டும் நல்லுள்ளங்களும் இணைந்தால் இந்த பூமியைப் பசுமையாக மாற்ற முடியும் என்பதற்கு இந்த இணையற்ற சாதனை ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இவர்களின் இந்த நெகிழ்ச்சியான கதை தற்போது இணையத்தில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *