நீதித்துறையின் சுதந்திரம் துடிப்பான ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்: உச்சநீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி

1 Min Read

புதுடில்லி, மார்ச் 7- நீதித்துறையின் சுதந்திரம் துடிப்பான ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண் என்று உச்சநீதிமன்ற நீதி பதி ஹிமா கோலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேற்கு வங்க தலை நகர் கொல்கத்தாவில் கடந்த 4.3.2023 அன்று  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது:

ஜனநாயகத்தின் மூன்று தூண்களான நாடாளுமன்றம், நிர் வாகம் மற்றும் நீதித்துறை ஒன்றுக்கொன்று இணை யாகப் பணியாற்ற வேண் டியது மிகவும் முக்கியம். இது நீதித்துறையின் சுதந் திரம், தன்னாட்சி மற்றும் பாரபட்சமற்ற தன்மை யைப் பாதுகாக்கும். இந் திய அரசியல் சட்டம் குறித்த விவாதத்தில் நீதித் துறையின் பங்கை அங்கீக ரிப்பது முக்கியம்.

நீதித்துறையின் சுதந்தி ரம் என்பது துடிப்பான ஜனநாயகத்தின் அடிப்ப டைத் தூண். தனது சுதந் திரம் மற்றும் ஒருமைப் பாட்டை பராமரிப்பதில் வியூப்பூட்டுகிற திறனை யும் உறுதியையும் இந்திய நீதித்துறை வெளிப்படுத்தியுள்ளது. என்றார் அவர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *