பிரதமர் பண்டித நேரு அவர்கள் டாக்டர் அம்பேத்கருக்கு எழுதிய பதில் கடிதம் இதோ:
ஆங்கிலத்தின் தமிழ் மொழியாக்கம்:
எண். 2196-PMH/56
புது தில்லி
செப்டம்பர் 15, 1956
அன்பார்ந்த டாக்டர் அம்பேத்கர்,
‘‘செப்டம்பர் 14ஆம் தேதியிட்ட தங்களின் உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் கேட்டுக் கொண்டபடி உங்கள் நூலின் அதிக எண்ணிக்கையிலான பிரதிகளை வாங்குவது எங்களால் இயலுமா என்பதில் எனக்குச் சந்தேகமே உள்ளது. புத்த ஜெயந்தி விழாவையொட்டி வெளியீட்டிற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை நாங்கள் ஒதுக்கியிருந்தோம். அந்தத் தொகை தீர்ந்துவிட்டது, மேலும் உண்மையில் அதிகமாகி விட்டது. நாங்கள் நிதியுதவி அளிக்க இருந்த பவுத்தம் தொடர்பான சில நூல் திட்டங்களைக்கூட நிராகரிக்க வேண்டியிருந்தது. எனினும், உங்கள் கடிதத்தை புத்த ஜெயந்தி குழுவின் தலைவரான டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் அனுப்பி வைக்கிறேன்.
வெளிநாடுகளிலிருந்து பலர் வருகை தரும் புத்த ஜெயந்தி விழாக் காலத்தில், டில்லியிலும் மற்ற இடங்களிலும் உங்கள் நூலை விற்பனைக்கு வைக்கலாம் என நான் பரிந்துரைக்கிறேன். அப்போது அது நன்கு விற்பனையாகக் கூடும்’’.
தங்கள் உண்மையுள்ள,
ஜவஹர்லால் நேரு
டாக்டர் பி. ஆர். அம்பேத்கர், எம்.பி.,
26, அலிபூர் சாலை,
சிவில் லைன்ஸ், டெல்லி.
இவ்வாறு நிதி உதவிட வாய்ப்பில்லை என்றுகை விரித்தார் நேரு!
2500 புத்த ெஜயந்தி கொண்டாட்டங்களை நடத்தி, உலகிற்கு வெளிச்சம் காட்டிட இந்திய அரசின் கஜானாவில் அதுவும் பல லட்சங்களை அப்போது ஒதுக்கி ‘2500 Years of Buddha’ போன்ற (டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் முன்னுரையுடன் வெளியிடப்பட்ட நூல்) ஒன்றிய அரசு நூல் வெளியீடு என்று நடத்தியது. ஆனால் இந்த ரூ.20 ஆயிரம் தொகையைப் பெற டாக்டர் அம்பேத்கரின் நூல்களை நூலகங்களுக்கு அனுப்பி உதவிட ஏனோ நேருவால் முடியவில்லை?
இதைப் பணமில்லை என்று நம்ப முடியுமா? அதைவிட மிக மிகக் கசப்பான உண்மை – ‘‘மனமில்லை’’ என்பதுதானே சரியானதாக இருக்க முடியும்.
முற்போக்காளர் நேருவின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் காரணமா அல்லது வேறு கண்ணோட்டமா என்பது புரியவில்லை
அதைவிட சிரிப்பு வரக்கூடிய அதில் ஒன்று என்ன தெரியுமா?
புத்த ஜெயந்தி கமிட்டியின் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு டாக்டர் அம்பேத்கரின் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளேன் என்று பிரதமர் நேரு கூறியதுதான்!
உங்கள் புத்தகங்களை விற்பனையாளர்களுக்கு அனுப்புங்கள். டில்லி விழாவிற்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் விழாவிற்கு வருகிறவர்கள் பலரும் வாங்கக்கூடும் என்பது ஒரு இலவச அரியதொரு (கருத்து தானம்) வழி கூறி, சோஷலிசம் பேசிய பண்டித நேரு இப்படி பதில் எழுதினார்.
அதற்குப் பின்னே இருப்பது எதுவோ! வாசகர்களே தீர்மானிக்கட்டும்.
எவராலும் இதை நியாயப்படுத்த முடியுமா?
