சென்னை, ஆக. 16- தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 17 மற்றும் ஆகஸ்ட் 19 ஆகிய தேதிகளில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் எச்சரித் துள்ளது.
வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இந்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்ய
வாய்ப்புள்ள மாவட்டங்கள்
ஆகஸ்ட் 17 (திங்கள்): திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 19 (செவ்வாய்): சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை பெய்யும் சமயங்களில் ஒருசில இடங்களில் பலத்த இடி, மின்னல் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
