சென்னை, ஆக. 15 – அய்ரோப்பிய பொறியியல் கழக முழுநேர உறுப்பி னராக சென்னை அய்அய்டி பேரா சிரியர் தாளப்பில் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அய்ரோப்பிய பொறியியல் கழகம் சுவீடன் நாட்டில் உள்ள கோதெர்ன்பர்க் நகரை தலைமை யிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதில் நோபல் பரிசு பெற்றவர்கள், கணினி உலகின் நோபல் பரிசு என அழைக்கப்படும் டூரிங் விருது பெற்றவர்கள் போன்றோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
இந்நிலையில், உலக அளவில் சிறப்பு வாய்ந்த அய்ரோப்பிய பொறியியல் கழகத்தில் முழுநேர உறுப்பினராக சென்னை அய்அய்டி வேதியியல் துறை பேராசிரியர் தாளப்பில் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3 ஆவது இந்தியர்
பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் சிஎன்ஆர்.ராவ், பீமன் பக்சி ஆகியோருக்குப் பிறகு இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படும் 3 ஆவது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் தாளப்பில் பிரதீப் நீர் சுத்திகரிப்பு மற்றும் நானோ டெக்னாலஜி துறையில் ஆற்றியுள்ள பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது.
நானோ நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம்
இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆர்சனிக், நச்சுகள் போன்ற மாசுபாடுகள் இல்லாத பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதற்கு அவர் கண்டுபிடித்த நானோ நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் காரணமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பத்மசிறீ, ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படும் உலகளாவிய அறி வியல் பரிசான பன்னாட்டு எனி விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
