அமெரிக்க கல்லூரியில் நிறப் பாகுபாடு இந்திய வம்சாவளி பேராசிரியை நீதிமன்றத்தில் வழக்கு

1 Min Read

வெல்லெஸ்லி, மார்ச் 11- அமெரிக்காவின் மாஸசூ செட்ஸ் மாகாணம் வெல்லெஸ்லியில் உள்ள கல்லூரியில் நிற மற்றும் பாலின பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லட்சுமி பாலசந்திரா பாப்சன் கல்லூரியின் தொழில்முனைவுத் துறையில் இணைப் பேராசிரியையாக 2012-இல் பணிக்குச் சேர்ந்தார்.

தொழில்முனைவு துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் ஆண்ட்ரூ கார்பெட், பணி இடத்தில் நிறம் மற்றும் பாலின பாகுபாட்டை கையாண்டதாகவும், வெள் ளையர் மற்றும் ஆண் ஆசிரியர்களுக்கு சாதகமாக செயல்பட்டு விருதுகள் மற்றும் சலுகைகளை அவர் களுக்கு வழங்கியதாகவும் லட்சுமி குற்றம்சாட்டியுள்ளார்.

வகுப்புகளின் பாட வேளை திட்டமிடல், ஆசிரியர் களுக்குப் பாடங்களை ஒதுக்கீடு செய்யும் பணியை கார்பெட் என்பவர் கவனித்து வந்துள்ளார். அப்போது, சில பாடங்களை நடத்த லட்சுமி வேண்டுகோள் விடுத்தும், குறிப்பிட்ட சில பாடங்களை மட்டுமே நடத்த கார்பெட் அனுமதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக மாகாணத் தலைநகர் பாஸ்டனில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பிப்.27-இல் அவர் மனு தாக்கல் செய்துள்ளதாக ‘தி பாஸ்டன் குளோப்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

இத்தகைய பாகுபாடுகள் காரணமாக ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் பல்வேறு தலைமைப் பொறுப்புகளும் வழங்கப்படுவது மறுக்கப்பட்டன என தனது மனுவில் லட்சுமி குறிப் பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக, மாஸசூசெட் ஸின் பாகுபாடுகளுக்கு எதிரான ஆணையத்திலும் லட்சுமி புகார் அளித்துள்ளதாக அவருடைய வழக்குரைஞர் மோனிகா ஷா தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *