பள்ளிக்கல்வித்துறை நிதி ஒதுக்கீடு குறைவு தவெக அரசுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சுட்டிக்காட்டு!

1 Min Read

திருச்சி, ஆக. 6- தவெக முதல் நிதிநிலை அறிக்கை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் விமர்சனங் களை முன்வைத்து வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பதாக திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி சுட்டிக்காட்டியுள்ளார்.

திராவிட மாடல் ஆட்சியின் போது கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்ததை சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய தவெக அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதி குறைக்கப்பட்டிருப்பது குறித்து தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அன்பில் மகேஸ் தனது பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: “கல்வி மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து” என உரக்கச் சொல்லும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் ஏறுமுகத்திலேயே இருந்தது. திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறைக்கு 2025-2026ஆம் நிதியாண்டில் ரூ.46,767 கோடியும், 2026-2027 நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.48,534 கோடியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் குறைவான நிதியே தற்போதைய தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. கடந்த 2025-2026ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் இது ரூ.2,240 கோடி குறைவாகும்.

மேலும், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற பெருமை என்றென்றும் தொடர்வதை உறுதி செய்ய வேண்டியது தற்போதைய தவெக அரசின் முக்கியக் கடமை என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *