பிரயாக்ராஜ் போராட்டம் மாணவர்களைக் காவல்துறை கடத்தியதாக அகிலேஷ் குற்றச்சாட்டு

1 Min Read

பிரயாக்ராஜ், ஜூலை 28 ‘நீட்’ தேர்வு கசிவை எதிர்த்து நடந்த மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்ட பல மாணவர்களை உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்புப் படையினர் எண்கள் இல்லாத வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு கடும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு மாணவர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று வாக்குறுதி அளித்திருந்த நிலையில், யாருடைய உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை நடக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் அகிலேஷ் யாதவ்.

தனது சமூக ஊடகப் பதிவில், “பிரயாக்ராஜ் போராட்டம் என்ற பெயரில் பல மாணவர்களை உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்புப் படை எண்கள் இல்லாத வாகனங்களில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளது. ஒன்றிய அரசு வாக்குறுதி அளித்திருந்த நிலையில், உத்தரப் பிரதேச காவல் துறை பிரதமரின் உறுதிமொழியையும் வாக்குறுதியையும் போலி வாக்குறுதி (ஜும்லா) என நிரூபிக்க முயல்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பிடித்துச் செல்லப்பட்ட அனைத்து மாணவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட அனைத்துக் காவல் துறையினரும், உயர் அதிகாரிகளும் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த மாணவர்களின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை நீதிமன்றம் உடனடியாகத் தானாக முன்வந்து கவனத்தில் கொள்ள வேண்டும் என அகிலேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *