டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மருத்துவப் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்; நீட் தேவையற்றது, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி.
* டில்லியில் போராடிய மாணவர்கள் மீது ரப்பர் குண்டு மூலம் துப்பாக்கிச்சூடு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
* டில்லி மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் 27.7.2026 அன்று விசாரிக்கும், தலைமை நீதிபதி அறிவிப்பு.
* வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை: மாநிலங்களவையில் மசோதா அறிமுகம்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மாணவர்கள் போராட்டத்தின் முக்கிய கோரிக்கை யின்படி தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? இன்று அறிவிப்பதாக ஒன்றிய அமைச்சர்கள் பேட்டி: கரப்பான் பூச்சி கட்சியுடனான பேச்சுவார்த்தையில் முடிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை பேச்சுவார்த்தையிலோ அல்லது விவாதத்திலோ எதிர்க்கட்சிகள் பங்கேற்காது,” என்று ராகுல் காந்தி திட்டவட்டம்.
– குடந்தை கருணா
