ஏப்.29 இல்: திராவிடர் கழக மாநில பொதுக்குழு – வெற்றி பெற்ற ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக்குப் பாராட்டு!

1 Min Read

அரசியல்

ஈரோடு, கோபி மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவுஈரோடு, மார்ச் 15 ஈரோடு, கோபி கழக நிர்வாகி கள் கலந்துரையாடல் கூட்டம் 13.03.2023 அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத் தில், மண்டல தலைவர் இரா.நற்குணன் தலை மையில், அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண் முகம், ஈரோடு மாவட்ட தலைவர் கு.சிற்றரசு, கோபி மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம், மாவட் டச் செயலாளர் வழக்குரைஞர் மு.சென்னியப் பன், மாநகர தலைவர் கோ.திருநாவுக்கரசு ப.சத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், பொதுச்செயலாளர் தஞ்சை 

இரா.ஜெயக்குமார் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம், ஈரோட்டில் பொதுக்குழு நடத்தவேண் டிய அவசியம் பற்றி உரையாற்றினர். பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:

தீர்மானம் 1:  திராவிடர் கழக மாநில பொதுக் குழுகூட்டத்தை ஈரோட்டில் ஏப்ரல் 29 அன்று நடத்துவதற்கு அனுமதி அளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை  தெரிவித்துக் கொள் கிறது. கழகப் பொதுக்குழு கூட்டத்தையும், அன்று மாலையில் தீர்மான விளக்கம் மற்றும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றி பெற்ற ஈ.வெ.கி.ச.இளங் கோவன் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் மிக எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.

தீர்மானம் 2: சமூகநீதிப் பாதுகாப்பு, திராவிட மாடல் பரப்புரை தொடர் பயண தொடக்கவிழாப் பொதுக்கூட்டத்தை ஈரோட் டில் மிகச்சிறப்பாக நடத்திய மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு கூட்டம் பாராட்டைத் தெரிவித்துக் கொண்டது. 

தீர்மானம் 3: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் வெற்றிபெற்ற ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர் களுக்கு திராவிடர் கழகம் சார்பில் வாழ்த்து களைத் தெரிவித்துக்கொள்கிறது.

கூட்டத்தில் பேரா.ப.காளிமுத்து, பொதுக் குழு உறுப்பினர்கள் கோ.பாலகிருட்டிணன், க.யோகானந்தம், தே.காமராஜ், ப.சத்திய மூர்த்தி, கி.சவுந்தரராஜன், டேவிட் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *