ஒன்றிய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஒன்றிய அரசு நிறுவனமான காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி மேலாளர், ஜூனியர் உதவியாளர் என மொத்தம் 148 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும்.

காலிப்பணியிடங்கள் விவரம்: கடந்த 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் ஏற்படும் காலியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 148 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது குறித்த விவரங்களை பார்க்கலாம். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியா முழுவதும் உள்ள சிசிஅய் அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

உதவி மேலாளர் (அலுவல் மொழி) – 1

உதவி மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்) – 1

மேலாண்மை பயிற்சியாளர் (மார்க்கெட்டிங்) – 8

மேலாண்மை பயிற்சியாளர் (கணக்கியல்) – 8

ஜூனியர் கமர்ஷியல் எக்ஸிகியூட்டிவ் – 50

ஜூனியர் உதவியாளர் (கணக்கியல்) – 50

ஜூனியர் உதவியாளர் (பொது) – 30

கல்வித் தகுதி: டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பி.காம்., பி.எஸ்சி (வேளாண்மை), பி.இ., பி.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சிஏ., சிஎம்ஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை இங்கு கீழே உள்ள தேர்வு அறிவிப்பில் காணலாம்.

வயது வரம்பு: 24.07.2026 அன்று தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். அதன்படி, உதவி மேலாளர் பணிக்கு மட்டும் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற அனைத்து பணிகளுக்கும் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 5 ஆண்டுகள் தளர்வும், ஓபிஎசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.

ஊதியம்: உதவி மேலாளர் – ரூ.40,000 – ரூ.1,40,000

மேலாண்மை பயிற்சியாளர் – ரூ.30,000 – ரூ.1,20,000

ஜூனியர் பணியிடங்கள் – ரூ.22,000 – ரூ.90,000

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: இந்த பணியிடங்களுக்கு இணைய வழி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமும் இணைய வழியில் செலுத்த வேண்டும். பொதுப்பிரிவினர் ரூ.1,770 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.590 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உள்ளவர் கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே இணைய வழியில் விண்ணப் பிக்க வேண்டும். இணைய வழியில் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 09.07.2026 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.07.2026 ஆகும். தேர்வு அறிவிப்பினை படிக்க:

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *