* சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தெற்கு ஒன்றிய திமுக அயலக அணி துணை அமைப்பாளர் சேது.ஜெகதீசன்-காசியம்மாள் இணையரின் மகன் ஜெ.இன்பன் அவர்களின் 20ஆவது பிறந்த நாளை (13/07/2026) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.1000 வழங்கினர்.
* தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (தாராபுரம் மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான 67ஆவது தவணையாக ரூ.1000 வழங்கியுள்ளார்.
*தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், அதிமுக தலைமைக் கழக சொற்பொழிவாளர் மாவடுகுறிச்சி ந.ரெ.பெருமாள் – காளியம்மாள், கட்டையன் காடு காங்கிரஸ் கிராம கமிட்டி தலைவர் சி.பெமையன்- முத்துலட்சுமி ஆகியோரின் பேரன் மாவடுகுறிச்சி ஆர். பி. நடராஜன் – மகேஸ்வரி இணையரின் மகன், ந.பிரியதர்ஷினியின் சகோதரர் ந.கைலாஷ் குமார் 12.07.2026 அன்று 19ஆம் அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!!
