மகாராட்டிராவில் கனமழை: நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3000 சமையல் எரிவாயு உருளைகள்!

1 Min Read

மும்பை, ஜூலை 9 மகாராட்டிராவில் பெய்து வரும் தொடர் கனமழையால் எரிவாயு நிரப்பும் ஆலையில் இருந்த 3,000 சமையல் எரிவாயு உருளைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், மகாராட்டிராவில் கடந்த சில நாள்களாகவே அதிக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், ராய்காட் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், எச்பிசிஎல் எல்பிஜி உருளைகள் நிரப்பும் ஆலையில் வெள்ளம் புகுந்தது. இதில், எரிவாயு நிரப்பப்பட்ட மற்றும் காலியானவை என சுமார் 3,000 எல்பிஜி உருளைகள் பாதாளகங்கா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், ஆற்றில் அடித்து வரப்படும் சமையல் எரிவாயு உருளைகளைத் தொட வேண்டாம் என்று அப்பகுதி மக்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் யாரும் எந்தவித ஆபத்தான முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்றும், ஆற்றிலோ அல்லது ஆற்றின் அருகிலோ எல்பிஜி சமையல் எரிவாயு உருளைகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *