தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17.3.2023) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்தில், தலைமைச் செயலக பணியாளர்களுக்காக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், அப்போலோ மருத்துவமனையோடு இணைந்து நடத்தும் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, முகாமில் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டார். உடன்: உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.