
குற்றாலம், ஜூன் 25 தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 47 ஆம் ஆண்டாக பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அன்னை மணியம்மையார் அவர்களின் காலத்தில் இது பயிற்சிப்பட்டறை தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 47 ஆம் ஆண்டு ஆகும். இந்த ஆண்டு, குற்றாலம் வி.கே.என். மாளிகையில் 25.06.2026 அன்று காலையில் 10:30 மணிக்குத் தொடங்கியது. தென்காசி மாவட்டச் செயலாளர் சண்முகம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமையேற்றுப் பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்டக் காப்பாளர் டேவிட் செல்லத்துரை, விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, மாநில மாணவர் கழக இணைச் செயலாளர் மு.இளமாறன், தூத்துக்குடி மாவட்டக் காப்பாளர் மா.பால் இராசேந்திரம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு
