இரா.கார்த்தி-பரணிலட்சுமி இல்லத் திறப்பு விழா

கரூர், ஜூன் 22- கரூர் மாவட்ட கழகத் தலைவர் ஆசிரியர் குமாரசாமி கடவூர் ஒன்றியச் செயலாளர் இரா.கார்த்தி, வாழ்விணையர் பரணிலட்சுமி ஆகியோரின் இல்லத்தினை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னதாக தந்தை பெரியார் படத்தினை மாவட்ட செயலாளர் காளிமுத்து திறந்து வைத்தார். அண்ணல் அம்பேத்கர் படத்தினை திமுக அரசு வழக்குரைஞர் மீரா குடியரசு திறந்து வைத்தார். தோழர் கார்த்தியின் தந்தை ராஜு தாய் பழனியம்மாள் ஆகியோர் படத்தினை சே. அன்பு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்டக் காப்பா ளர் வே,ராஜு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜெகநாதன், மாவட்ட துணைச் செயலாளர் அலெக்ஸ், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத் தலைவர் பெருமாள் அமைப்பாளர் விடுதலை, இளைஞர் அணி தோழர்கள் காந்திகிராமம் ராஜா, குமார் டைலர், நைஸ் சபாபதி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ராஜாமணி மற்றும் கழகத் தோழர்கள் நிர்வாகிகள் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *