காரைக்கால் மாவட்டத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா

1 Min Read

திராவிடர் கழகம்

காரைக்கால், ஜூன் 19– காரைக்கால் மாவட்டம் திராவிட கழகத்தின் சார்பில் காரைக்கால் 13.06.2026 சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் புதிய பேருந்து நிலையம் அருகில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின்  103ஆவது பிறந்தநாள் விழா. திராவிடர் எழுச்சி நாள் பிரச்சார கூட்டம் எழுச்சியுடன் நடை பெற்றது.

மாவட்ட காப்பாளர்  ந.அன்பானந்தன் நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றினார். காரைக்கால் மாவட்ட துணைத்தலைவர் க.பதிஜெயசங்கர், அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக. பொன்முடி, தொடக்க உரையாற்றினார்.

சிதம்பரம் மாவட்ட கழகத் தலைவர் பேராசிரி யர் பூ.சி.இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.

தரங்கை பகுதி பொறுப்பாளர் நாத்திக.பைசல், இராமலிங்கம். ஆகியோர் நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர். திமுக மாநில மாணவரணி அமைப்பாளர் ப.பெரியார் ஜவகர், திருவாரூர் மாவட்டச் செயலாளர் கோ.பிளாட்டோ, சி.பி.அய். மாவட்ட செயலாளர் எஸ்.தமிழரசன், சி.பி.அய்.(எம்) காரைக்கால் பகுதி மூத்த தோழர் வே.கு.நிலவழகன், விசிக மாநில அமைப்புச் செயலாளர் அ.அரவரசன், எஸ்.டி.பி.அய். மாநிலத் தலைவர் சுல்தான் கவுஸ், மற்றும் கழகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு உரையாற் றினார்கள்.

காரைக்கால் மாவட்டச் செயலாளர் பொன். பன்னீர்செல்வம், நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்து. நிகழ் வினை தொகுத்து வழங்கி உரையாற்றி அனைவ ருக்கும் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *