தஞ்சாவூர், ஜுன் 17- தஞ்சாவூர் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக, 2025-2026 ஆம் ஆண்டிற்கான கலை விருதுகள் வழங்கப்பட உள்ளன. இயல், இசை, நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு வயது அடிப்படையில் `கலை இளமணி’ முதல் `கலை முதுமணி’ வரை விருதுகள் வழங்கப்படவுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள கலைஞர்கள், வயது மற்றும் கலைத்திறன் சான்றிதழ்களுடன், ஜூலை 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மய்யம், வல்லம் சாலை, பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர் – 613 403 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏற்கெனவே தேசிய, மாநில அல்லது மாவட்ட விருதுகள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என தஞ்சை மாவட்ட ஆட்சியர் இரா.ரேவதி தெரிவித்துள்ளார்.
