சென்னை, ஜூன் 13 – மதம், ஜாதி சம்பந்தப்பட்ட அடையா ளங்களோடு கல்வி வளாகங்களுக்கு யாரும் வரக் கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள் ளார். சென்னை கோட்டூர்புரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறிய கயிறாக இருந்தாலும் நான் வரும்போது கழட்டிப் போட்டு விட்டுத்தான் வருகிறேன். இங்கு ஒற்றுமையை வளர்க்கும் எதுவாக இருந்தாலும் வரலாம். பிரிவினையை வளர்க்கும் எதற்கும் இடமில்லை. சமூக நீதிக்கு மட்டுமே இடம் இருக்கிறது” என்று வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் முதற்கட்டமாக அய்ந்தாயிரம் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பைத்தான் உள்ளிட்ட கோடிங் பயிற்சி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
