“அஞ்சா நெஞ்சன்” என்ற பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி அவர்களின் நினைவு நாள் வரும் மார்ச்சு 28 (1949).
இந்த வீர மறவன்
50 ஆண்டு நிறைவு பெறுவதற்கு முன்பே தன் இறுதி மூச்சைத் துறந்தார் என்றாலும் அவர் கர்ச்சனையால் கவரப்பட்ட இளைஞர்கள் எண்ணற்றோர் – மறைந்த நமது முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் உள்பட.
அப் பெருமகனின் நினைவைப் போற்றும் வகையில் வரும் 28ஆம் தேதி பட்டுக் கோட்டையிலும், தஞ்சையிலும் உரிய வகையில் பிரச்சாரக் கூட்டமாக நடத்துமாறு கழகப் பொறுப் பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
– கலி. பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்