கின்ஷாஷா, மே 27- காங்கோவில் ‘எபோலா’ வைரஸ் பாதிப்பின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கண்டத்திற்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் வேக மாக பரவி வருகிறது. இது ஒரு தீவிரமான மற்றும் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயாகும். இந்த வைரஸ் உள்ளவர்களின் ரத்தம், வியர்வை, விந்து போன்ற உடல் திரவங்கள் வாயி லாக மற்றவர்களுக்கு பரவு கிறது.
தற்போது பரவி வரு வது ‘புண்டிபுக்யோ’ எனப்படும் உருமாறிய எபோலா வைரஸ் ஆகும். இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப் பூசியோ, மருந்துகளோ எதுவும் இல்லை. நிலை மையின் தீவிரத்தை உணர்ந்த உலக சுகாதார அமைப்பு, இதை உலக ளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறி வித்துள்ளது.
காங்கோவின் அண்டை நாடுகளான அங்கோலா, புருண்டி, எத்தியோப்பியா, கென்யா, ருவாண்டா, தெற்கு சூடான், தான்சானியா, ஜாம்பியா உள்ளிட்ட 10 நாடுகளுக்கு எபோலா பரவும் அபாயம் மிக அதிகமாக இருப்பதாகவும் எச்சரித்துள்ளது. எனவே, நோய் மேலும் பரவாமல் தடுக்க உடனடி மற்றும் ஒருங்கிணைந்த பன் னாட்டு நடவடிக்கை தேவை என்று உலக சுகாதார அமைப்பு வலி யுறுத்தியுள்ளது.
எபோலா பரவல் அச்சம் காரணமாக, 4ஆவது இந்திய-ஆப்பிரிக்க கூட்டமைப்பு உச்சி மாநாட்டை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.
மேலும் விமான நிலை யங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எபோலா பாதிப்புள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணியர் அல்லது அந்த நாடுகள் வழியாகப் பயணித்து இந்தியா வருபவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற் பட்டால், அவர்கள் உட னடியாக விமான நிலைய சுகாதார அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத் தரவிடப்பட்டுள்ளது.
900-அய் கடந்தது பாதிப்பு
கிழக்கு காங்கோவின், இடூரி மாகாணத்தில் எபோலா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 900-அய் கடந்துள்ளது. காங்கோ தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி, எபோலா அறிகுறியுடன் 904 பேரும் பாதிக்கப்பட்டவர்களில், 119 பேர் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
