தமிழ்நாட்டின் குரலுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன்

மதுரை, மே 23- தமிழ் நாட்டின் குரலுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என மார்க்சிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

உதவி தணிக்கை அலு வலர், கணக்கு அலுவலர் பதவிகளுக்கான பணி நியமன அறிவிப்பில் மாநில மொழி தகுதி சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு பணிகளில் மாநில மொழி அறிவை அடிப்படை தகுதியாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான போரில்

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய

49 இந்தியர்கள் பலி
ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி, மே 23- உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய மொத்தம் 217 இந்தியர்களில் 49 பேர் பலியானதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதில் 139 பேர் ராணுவ ஒப்பந்தங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ள நிலையில், 6 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *