அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்! உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, மே 19 தெருநாய்களை பொது இடங்களில் இருந்து அப்புறப்படுத்தும்படி 2025 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தெருநாய்களை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட நடைமுறைப்படி கருணைக்கொலை செய்யலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டார்.

நாட்டில் வெறிநாய்க்கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்த நிலையில் செய்திகள் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற நிறுவனப் பகுதிகளில் இருந்து அனைத்த் தெரு நாய்களையும் அகற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி நாய் பிரியர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று (மே 19) உச்சநீதிமன்றம் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவுகள் வருமாறு:

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு விலங்கு களுக்கான கருத்தடை மய்யம் செயல்படுத்த வேண்டும்.  மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, விலங்குகளுக்கான கருத்தடை மய்யங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை என்பது, நாய்க்கடி அச்சுறுத்தலின்றி சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை உள்ளடக்கியது; இந்த விஷயத்தில் அரசு ஒரு செயலற்ற பார்வையாளராக இருக்க முடியாது. தெருநாய்கள் விவகாரத்தில் அனைத்து மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாய்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்க வேண்டும்.

மனித உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் நோய்வாய்ப்பட்ட மற்றும் ஆக்ரோஷமாக இருக்கும் தெருநாய்களை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட நடைமுறைப்படி கருணைக்கொலை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தெருநாய்களை பொது இடங்களில் இருந்து அப்புறப்ப டுத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *