குற்றவியல் வழக்குகளில் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முதலிடம்! ஏடிஆர் அறிக்கை அதிர்ச்சித் தகவல்

1 Min Read

சென்னை, மே 12- தமிழ்நாடு 17-ஆவது சட்டமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் குற்றப்பின்னணி குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பான ஏ.டி.ஆர். ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் 233 சட்டமன்ற உறுப்பினர் களில் 54 சதவிகிதத்தினர் அதாவது 126 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
கட்சிகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாக த.வெ.க.-வின் 107 சட்டமன்ற உறுப்பினர்களில் 41 பேர் வழக்குகளில் சிக்கியுள்ளனர். மேலும், 107 சட்டமன்ற உறுப்பினர்களில் 56 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அதில் த.வெ.க. சார்பில் 19 பேர், அ.தி.மு.க. சார்பில் 14 பேர், காங்கிரஸ் சார்பில் 2 பேர் கடுமையான வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.
இவர்களில் 2 பேருக்கு எதிராக கொலை வழக்கும், 6 பேருக்கு எதிராக கொலை முயற்சி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *