முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் அய்.ஏ.எஸ். நியமனம்!

1 Min Read

சென்னை, மே 10 தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்று (10.5.2026) முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். புதிய அரசு அமைந்துள்ள நிலையில் நிர்வாக ரீதியாக மாற்றங்கள் எடுக்கப்படும்.

அந்த வகையில் தற்போது முதலமைச்சர்  ஜோசப் விஜய்யின் முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் அய்.ஏ.எஸ். நிய மனம் செய்யப்பட்டுள்ளார். சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்தவர் செந்தில்குமார். தற்போது அவர் முதன்மைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலாளராக இருந்த லட்சுமி பிரியா, ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து அதி காரிகள் மாற்றம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *