பிளஸ் 2 தேர்வு முடிவுகளால் மன அழுத்தம்! மாணவர்களின் மனநலம் காக்க ‘நட்புடன் உங்களோடு’ – உதவி எண்கள் அறிவிப்பு!

1 Min Read

சென்னை, மே 9- தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சூழலில், மாணவர்களின் மன உறுதி மற்றும் மன நலனை மேம்படுத்த தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இதற்காக ‘நட்புடன் உங்களோடு’ என்ற திட்டத்தின் கீழ் தொலை பேசி வாயிலாக மனநல ஆலோசனைகள் (Tele-Counseling) வழங்கப்பட்டு வருகின்றன.

தேர்வு முடிவுகளால் மன அழுத்தம் அல்லது கவலைக்குள்ளாகும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் 14416 104 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இந்தச் சேவையானது பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்களைக் கொண்டு முற்றிலும் கட்டணமின்றி வழங்கப் படுகிறது. மாணவர்கள் எவ்விதத் தயக்கமுமின்றி இந்த எண்களை அழைத்து தங்களது மனக் குறைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் எனத் தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உயர்கல்வி வழிகாட்டுதல்:

தேர்ச்சி பெற்ற மாண வர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு சேரலாம்? போன்ற உயர் கல்வி சார்ந்த சந்தேகங் களுக்குப் பள்ளிக்கல்வித் துறையின் சிறப்பு 14417 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தைத் திட்டமிடவும், தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்கவும் இந்த அரசு முறைச் சேவைகளைப் பயன் படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *