கிராம நத்தம் நிலங்களை தனிநபர் உரிமை கோர முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

1 Min Read

சென்னை, மே 6– “கிராம நத்தம்” நிலங்களை தனிநபர்கள் யாரும் ஆக்கிரமிக்கவோ அல்லது அதற்கு முழு உரிமை கோரவோ முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

கிராம நத்தம் நிலம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில், கிராம நத்தம் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அகற்றுமாறு தமிழ்நாடு அரசு தாக்கீது (நோட்டீஸ்) அனுப்பியிருந்தது. இந்த அரசு உத்தரவை எதிர்த்து, கடை உரிமையாளர் செல்வகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது கடையை அகற்ற இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிராம நத்தம் நிலங்கள் தொடர்பான சட்ட விதிகளைச் சுட்டிக்காட்டி பின்வரும் கருத்து களைப் பதிவு செய்தனர். கிராம நத்தம் நிலங்கள் என்பது பொதுப் பயன்பாட்டிற்கானது. அவற்றை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்வதோ அல்லது அதன் மீது முழு உரிமை கொண்டாடுவதோ சட்டப்படி செல்லாது.

மேல்முறையீடு வழிவகை: அரசின் தாக்கீதை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்ய சட்டத்தில் ஏற்கெனவே இடமுள்ளது. அதை விடுத்து நேரடியாக நீதிமன்றத்தை அணுகியது முறையல்ல. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி, கடை உரிமையாளர் தொடர்ந்த மனுவை நீதிபதிகள் அதிரடியாகத் தள்ளுபடி செய்தனர்.

இந்தத் தீர்ப்பு, நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் போலவே கிராம நத்தம் நிலங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *