கொள்கை வீராங்கனை
வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி தலைவராக இருந்து சிறப்பான வகையில் இயக்கப் பணிகளை ஆற்றியவரும், கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் முன் வரிசையில் நின்றவரும், வடசென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளராக இருந்து சீரிய கழகப் பணியாற்றி, ‘மிசா’ கைதியாக ஓராண்டு சிறை வாசம் ஏற்ற வில்லிவாக்கம் குணசீலன் (மறைவு) அவர்களின் வாழ்விணை யருமான கொள்கை வீராங்கனை தங்கமணி (வயது 85) அவர்கள் நேற்று (3.5.2026) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
உடலால் மறைந்தாலும், இயக்கத் தொண்டால் நம் நெஞ்சில் நிறைந்திருக்கும் சகோதரி தங்கமணி அவர்களுக்கு வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள் கிறோம்.
அவர் மறைவால் பெருந்துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவரது மகன்கள், மகள்கள் மற்றும் குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.5.2026
