எல் சால்வடார் நாட்டில் ஒரே நேரத்தில் 486 பேருக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் வழக்கு விசாரணை

1 Min Read

சாம் சால்வடார், ஏப். 26– மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடார் நாட்டில், எம்.எஸ்.-13 என்ற குற்றப் பின்னணிகள் கொண்ட பிரபல கும்பலைச் சேர்ந்த 486 பேருக்கு எதிராக மாபெரும் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது.

டெகோலுகாவில் அமைந்துள்ள கடுமையான பாதுகாப்புகளைக் கொண்ட சிறைச்சாலை யில், கை, கால் சங்கிலியி டப்பட்ட நிலையில் கைதிகள் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் 486 பேர் மீதான வழக்கு விசா ரணை ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. கடந்த 2012 முதல் 2022 வரை நடைபெற்றதாக கூறப்படும் ஆயிரக்கணக்கான கொலை, ஆயுத கடத் தல் உள்ளிட்ட பல குற்றச் சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. மேலும் அங்கு நிலவும் கும்பல் வன்முறையை, கட்டுப்படுத்தும் நடவடிக் கையாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *