ஜி.யு.போப் பிறந்தநாள் இன்று (24.4.1820)
ஜி.யு. போப் 1820-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் நாள் கனடா நாட்டின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் ஜார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope) என்பதாகும். கிறித்தவ சமயத்தைப் பரப்புவதற்காகத் தனது 19-ஆவது வயதில் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
மத போதகராக வந்தாலும், தமிழ் மொழியின் மீதிருந்த பற்றால் அதன் இலக்கியங்களைக் கற்று உலகறியச் செய்தார்.
திருக்குறளின் சிறப்பை உணர்ந்த அவர், அதனை 1886-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதன் மூலம் உலகமே வள்ளுவத்தைப் போற்றும் நிலை உருவானது.
புறநானூறு: தமிழ் வீரத்தையும், பண்பாட்டையும் விளக்கும் புறநானூற்றுப் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இலக்கண நூல்கள் தமிழ் மொழியைக் கற்க விரும்பும் மேலைநாட்டினருக்காகப் பல தமிழ் இலக்கண நூல்களை எளிமையாக உருவாக்கினார். தன்னை ஒரு “தமிழ் மாணவன்” என்று அழைத்துக்கொள்வதையே அவர் பெருமையாகக் கருதினார். தமிழ் மொழியை உலக அரங்கில் உயர்த்திய அந்த உன்னத மனிதரின் பிறந்தநாளான ஏப்ரல் 24, இன்றும் தமிழ் ஆர்வலர்களால் நன்றியுடன் நினைவுகூரப்படுகிறது.

