டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தொகுதி மறுவரையறை என்ற கருப்புச் சட்டம்: சட்ட நகலை எரித்து மு.க.ஸ்டாலின் போராட்டம்: தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* “மகளிர் இடஒதுக்கீடு போர்வையில் வரும் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கட்சிகள் அனுமதிக்காது” – கார்கே
* பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவையும், தொகுதி மறுவரையறை மசோதாவையும் இணைத்து வெளியிடுவது ஒரு சதிவேலை, மம்தா குற்றச்சாட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சி அமைப்பின் மீதான அடிப்படைத் தாக்குதல்: எதிர்க்கட்சிகள் கண்டனம். எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் திமுக எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர்;
* பாஜக ‘நாரியை’ (பெண்ணை) வெறும் ‘நாராவாக’ (முழக்கமாக) மாற்றிவிட்டது; இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) பெண்களின் உரிமைகளை பறிக்க முயல்கிறது: பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் பாஜகவை கடுமையாக சாடிய அகிலேஷ்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எல்லை மறுவரையறை நடவடிக்கையில் ஒடிசா நான்காவது மிகப்பெரிய இழப்பை சந்திக்கும்: நவீன் பட்நாயக். ஒடிசாவின் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்று எச்சரித்த பிஜு ஜனதா தளம் (BJD) தலைவர், மாநிலத்தின் அரசியல் உரிமைகள் நீர்த்துப்போக செய்யப்படுவதை எதிர்த்து போராட, ஒடிசா முதலமைச்சர் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தி இந்து:
*ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு அச்சு விளம்பரங்களுக்காக மோடி அரசின் கலாச்சார அமைச்சகம் ரூ.76 லட்சம் செலவிட்டது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரகசியம் அம்பலம்.
* ‘பழைய தரவுகளுடன் தொகுதி மறுவரையறை செய்வது தேர்தல் கட்டமைப்பை சீர்குலைக்கக்கூடும்’, உச்ச நீதிமன்றம் 2025இல் எச்சரித்தது.தொகுதி மறுவரையறை தன்னிச்சையானது எனக் கண்டறியப்பட்டால், நீதி மன்றம் தலையிட முடியும் என்று தீர்ப்பளித்துள்ளது.
– குடந்தை கருணா

