டில்லியில் கல்லூரி விழாக்களில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: மகளிர் ஆணையம் விசாரணை

1 Min Read

அரசியல்

புதுடில்லி, ஏப். 6- டில்லியில் கல்லூரி விழாக்களின்போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது குறித்து மக ளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியது. டில்லி இந்திரபி ரஸ்தா பெண்கள் கல்லூரியில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடை பெற்ற கல்லூரி விழாவின்போது சுவரேறி குதித்து உள்ளே நுழைந்த சிலர், மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததாக அக்கல்லூரி மாணவி கள் குற்றம் சாட்டினர். அதைய டுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், 7 பேரை கைது செய் துள்ளனர்.

டில்லியில் உள்ள கார்கி, மிராண்டா கல்லூரி விழாக்களின் போதும் இதுபோன்ற பாலியல் தொந்தரவு சம்பவங்கள் நடந்திருப் பதாக கடந்த காலங்களில் புகார் கூறப்பட்டிருக்கிறது. அதையடுத்து இந்த சம்பவங்கள் தொடர்பாக டில்லி மகளிர் ஆணையம் விசார ணையை தொடங்கியுள்ளது. 

இதுகுறித்து அந்த ஆணையம் 4.4.2023 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக் காமல் தடுப்பதற்கு வலுவான அமைப்பை உருவாக்கும் வகையில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. 

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற் கொள்ளுமாறு டில்லி காவல்துறை மற்றும் இந்திரபிரஸ்தா கல்லூரி நிர்வாகத்துக்கு அறிவிக்கை அனுப் பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், டில்லி பல் கலைக்கழக பதிவாளர், டில்லி காவல் துறை இணை ஆணையர், பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு காவல் துறை பிரிவு ஆகி யோர் இந்த விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை அளிக்கும்படி மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

டில்லி பல்கலைக்கழகம் மற்றும் டில்லி காவல்துறை அதிகாரிகள், தேவையான தகவல்களுடன் வருகிற 6ஆம் தேதி ஆணையத்தின் முன் ஆஜராக வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *