கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 22.3.2026

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* எப்ஸ்டீன் விவகாரத்தில் பிரதமர் மோடியின் பெயர் உள்ளதான குற்றச்சாட்டில் ஆர்.எஸ்.எஸ். நிலைப்பாடு என்ன? நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் நோக்கி, காங்கிரஸ், பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வாஞ்சித் பகுஜன் அகாதி மார்ச் 23இல் பேரணி.

* அடுத்த 5 ஆண்டுகளில் (2026-2030) துறை வாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை ‘ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்’ என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* வெளிநாட்டில் கட்டிப்பிடிப்பது.. இந்தியாவில் பிரிவினை பேசுவதா? மோடியே மிகப்பெரிய ஊடுருவல்காரர்: கொல்கத்தா ஈத் பெருவிழா கூட்டத்தில் முதலமைச்சர் மம்தா கடும் தாக்கு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அமலாக்கத்துறை தாக்கீது அச்சுறுத்தலுக்கு பிறகு மேனாள் துணை குடியரசுத தலைவர் ஜக்தீப் தங்கர் பதவி விலக செய்ய நிர்பந்திக்கப்பட்டார் என சிவசேனா (UBT) தலைவர் ராவத் தனது புதிய புத்தகத்தில் குற்றச்சாட்டு

தி இந்து:

* வாக்காளர் பட்டியலில் இருந்து எந்த ஒரு உண்மையான வாக்காளரையும் நீக்க வேண்டாம் என தேர்தல் ஆணையத்திடம் நாடாளுமன்றக் குழு அறிவுறுத்தியுள்ளது

தி டெலிகிராப்:

* நாட்டின் தற்போதைய பொருளாதார சூழலை கையாள்வதற்கு தேவையான திசையும், உத்தியும் மோடி அரசிடம் இல்லை. அடுத்த மாதம் நடைபெற உள்ள மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா , புதுச்சேரி தேர்தல்களுக்குப் பிறகு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை ஒன்றிய அரசு உயர்த்தக் கூடும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவு.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *