கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.3.2026

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னிலை; மகாராட்டிரா, குஜராத்தை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது திராவிட மாடல் ஆட்சியில் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

* பல்கலைக்கழகங்களின் அதிகாரம் பறிபோகும் உயர்கல்வி மசோதா; கூட்டாட்சி கட்டமைப்பை மீறுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு. மசோதாவை வரைவு செய்யும் போது அமைச்சகம் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கவில்லை. மசோதாவானது, வி.பி.எஸ்.ஏ-விற்கு வரம்பிற்கு அப்பாற்பட்ட அதிகாரங்களை வழங்குகிறது. மேலும் குறிப்பாக மாநில அரசின் அதிகாரங்களில் அத்துமீறுகிறது. இது அரசியலமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாக உள்ளது, என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்குதலுக்காக அறிவிக்கப்படாத குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக மம்தா குற்றச்சாட்டு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆந்திராவில் தலித் கிறிஸ்தவர்கள் பட்டியல் ஜாதி அந்தஸ்து கோரிக்கை. தலித் கிறிஸ்தவர்களுக்கு கடந்த 77 ஆண்டுகளாக இடஒதுக்கீடு சலுகைகள் மறுக்கப்பட்டு வருவதாகவும், இது அம்மாநிலத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

* தலைநகர் டில்லியில் ஹோலிப் பண்டிகையால் உயிர் இழப்பு: ஹோலிப் பண்டிகையின் போது இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 26 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் காரணமாக, தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்துள்ள மேற்கு டில்லியின் இப்பகுதியில், “இப்போது எல்லாம் நலமாகவே இருக்கிறது; ஆனால் ஈத் பண்டிகை அன்று என்ன நடக்குமோ என்று தெரியவில்லை,” என்பதே அனைவரின் வாயிலும் ஒலிக்கும் பொதுவான புலம்பலாக உள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மகிழ்ச்சி நிறைந்த நாடு: பின்லாந்து முதல் இடம்; 147 நாடுகளில், இந்தியா 116ஆவது இடம். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘நல்வாழ்வு ஆராய்ச்சி மய்யம்’ (WELLBEING RESEARCH CENTRE) வெளியிட்டுள்ள இந்த ஆண்டு ஆய்வறிக்கையின்படி, பின்லாந்து நாடு தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாகத் திகழ்கிறது.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *