புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பெ.தங்கையன் – காசிநதி இணையரின் மகள் த.கலைவாணி, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வீ.தனபால் – செல்வி இணையரின் மகன் த.பரிதின் ஆகியோரின் இணையேற்பு விழாவைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார், வி. பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் தலைமைச் செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன், மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், கோபி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், கபடி ராமகிருஷ்ணன், ஜெகநாதன், புரசை அன்புச்செல்வன், நெல்லுப்பட்டு இராமலிங்கம் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (ஒரத்தநாடு,15.03.2026)
