இங்கு ஜாதிகள் இல்லை-ஏழைகள் மட்டுமே என்று கூறும் மோடி தன்னை ஏன் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிக்காரன் என்று அடையாளப்படுத்துகிறார் – ராகுல் கேள்வி

Viduthalai
1 Min Read

அரசியல்

ராய்ப்பூர், நவ. 5- பழங்குடியினரை ‘ஆதிவாசி’ என்று குறிப்பிடாமல் ‘வனவாசி’ என்று குறிப்பிட்டு பழங்குடியினரை பாஜக அவமதிப்பதாக மேனாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் ஆதிவாசிகள் தான் நாட்டின் உண்மை யான உரிமையாளர்கள் என்பதால் அவ்வாறு அழைத்தால் அவர்களின் நிலம், நீர், காடுகளை திரும்ப வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

காங்கிரஸ் கட்சியின் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை சாடி வரும் பிரதமர் மோடி, நாட்டில் ஏழைகள் என்ற ஒரேயொரு ஜாதி மட் டுமே இருப்பதாக கூறி வருவதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

இதுதொடர்பாக சத் தீஷ்காரின் ஜக்தால்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், “ஏழைகள் மட் டுமே நாட்டின் ஒரே யொரு ஜாதி என பிரதமர் மோடி கூறுகிறார். 

ஆனால் தாழ்த்தப்பட் டோர், ஆதிவாசி, பிற் படுத்தப்பட்டவர்கள் போன்ற ஜாதிகள் இருப் பது நமக்கு எல்லாம் தெரியும். நாட்டில் ஒரே யொரு ஜாதிதான் இருந் தால், பிரதமர் ஏன் தன்னை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (ஓ.பி.சி) சேர்ந்த வர் என அடையாளப்ப டுத்துகிறார்?’ என கேள்வி எழுப்பினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *