பழங்களை ரசாயன முறையில் பழுக்க வைப்பதா? கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

Viduthalai
3 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஏப். 12- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கோடை கால வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை தேனாம் பேட்டையில் உள்ள பொது சுகா தாரத்துறை இயக்குநர் அலுவலகத் தில் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தற்பொழுது கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் குறிப் பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

பொது மக்கள் உயர் வெப்ப நிலையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உடலின் வெப்பம் தணியும் அளவிற்கு குடிநீரை அடிக்கடி பருக வேண்டும்.

அடிக்கடி தண்ணீர் குடித்து நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், வெளியிடங் களுக்கு செல்லும்போது பாட்டி லில் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும், ORS கரைசலை பருகலாம். எலுமிச்சை, தர்பூசணி, கிர்ணி பழச்சாறுகள், மோர், லஸ்ஸி போன்றவற்றை பருக வேண்டும்.

நீர்ச்சத்து அதிகம் உள்ள திராட்சை, வெள்ளரி காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பருத்தியால் ஆன வெளிர் நிறம் கொண்ட மெல்லிய ஆடைகளை தளர்வாக அணிய வேண்டும். வெயிலில் செல்லும்போது காலணி களை அணிந்து செல்ல வேண்டும். வேலை இல்லாத நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

ரசாயனங்கள் மூலம் பழங்களை 

பழுக்க வைத்தால் நடவடிக்கை

பழங்களில் அதிகப்படியான ரசாயனங்களை போட்டு பழுக்க வைக்கின்ற பழக்கங்களும் உள்ளது. இது தொடர்பாக உணவுத் துறைக்கு அறிவுறுத்தி உள்ளோம். மாம்பழத்தில் ரசாயன கற்களை போட்டு பழுக்க வைப்பார்கள், தர்பூசணி பழங்கள் கூட ஊசிப் போட்டு பழுக்க வைக்கப்படுகிறது. குறுகிய மனநிலை கொண்ட வணி கர்கள் சிலர் உடனடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில், இது போன்ற கொடூரமான செயல்களில் ஈடுபடு கின்றனர்.

தர்பூசணிப் பழத்தை சிவப்பாக மாற்றுவதற்கு போடப்படும் ஊசியினால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கோடை காலத்தில் மட்டு மல்லாமல் எப்போதும் இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்ற னர். உணவு பாதுகாப்பு அதிகாரி கள் இதுபோன்று ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்து, இது போன்று தவறுகள் எங்கு தெரிகிறதோ அந்த இடத்திற்கு சென்று கண்ட றிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் தெரிவிக்க 9444042322 எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் புகார் செய்தால் உனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் செய்பவர்களின் பெயர் ரகசியமாக பாதுகாக்கப்படும். பழங்களில் ரசாயனங்கள் தென்பட்டாலோ, ரசாயனங்கள் கலந்து பழங்கள் பழுக்க வைப்பதாக சந்தேகம் ஏற்பட்டாலோ பொதுமக்கள் இந்த வாட்ஸ்அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

ரசாயனம் கலந்து பழங்களை பழுக்க வைத்து விற்றால், கடையை மூடுதல், கைது, லைசன்ஸ் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப் படும். கோடைகாலத்தில் காலவதி யான பொருட்களை விற்பனை செய்தால், அவர்கள் மீதும் நட வடிக்கை எடுக்கப்படும். சாதாரண மாக விற்கப்படும் சோடா, கலர் போன்ற குளிர்பானங்களையும் ஆய்வுச் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது” என்று கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *