கிண்டியில் 3 நாள்கள் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு மூலம் இணையதளப் பயிற்சி! தமிழ்நாடு அரசு ஏற்பாடு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 2– செயற்கை நுண்ணறிவு மூலம் வெப் டிசைனிங் உருவாக்குதல் குறித்து கிண்டியில் 3 நாள் பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

உலகில் ஒவ்வொரு வணிகத் திற்கும் இணையதளம் என்பது இன்றியமையாத தேவையாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தொழில்முனைவோர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் (EDII-TN), செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) மூலம் இணையதளங்களை வடிவமைப்பது (Web Designing) குறித்த பயிற்சி மார்ச் 4 முதல் 6-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இதில் எச்டிஎம்எல் மற்றும் சிஎஸ்எஸ்-இன் அடிப்படைகள், இணையதள வடிவமைப்பின் முக்கியக் கோட்பாடுகள். செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி மிக எளிமையாகவும், வேகமாகவும் இணையதளங்களை வடிவமைக்கும் நவீன முறைகள் கற்றுக் கொடுக்கப்படும்.

நேரடிப் பயிற்சி: பங்கேற்பாளர்கள் நேரடியாகத் தங்களின் சொந்த இணையதளத்தை உருவாக்கி, அதை இணையத்தில் வெளியிடும் நடைமுறைப் பயிற்சி வழங்கப்படும்.

மேலும், இணையதளங்களைத் தேடுபொறியில் முன்னிலைப்படுத்தும் எஸ்இஓ (Search Engine Optimization) முறைகள் பற்றியும் விளக்கமளிக்கப்படும்.

பயிற்சி முடிவில், அய்டி நிறுவனங் களில் வேலைவாய்ப்பு, ஃப்ரீலான்ஸ் (Freelance) முறையில் இணையதள மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தொழில் களுக்கான டிஜிட்டல் சேவை வழங்கும் வணிகத்தைத் தொடங்குதல் போன்ற பல்வேறு வாய்ப்புகள் குறித்து வழிகாட்டப்படும்.

இந்தப் பயிற்சியில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, கணினி அறிவு கொண்ட, 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். இப்பயிற்சிக்கு முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: இணையதளம்: www.editn.tn.gov.in தொலைபேசி எண்கள்: 9360221280, 8668100181

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *